வேதாகமம் சிதைக்கப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்டதா?

கேள்வி வேதாகமம் சிதைக்கப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்டதா? பதில் பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் சுமார் கி.மு. 1400 முதல் கி.மு. 400 வரையிலுள்ள காலக்கட்டத்தில் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள் கி.பி. 40 முதல் கி.பி. 90 வரையிலுள்ள காலக்கட்டத்தில் எழுதப்பட்டன. எனவே, வேதாகமத்தின் ஒரு புத்தகம் எழுதப்பட்டதிலிருந்து 3,400 முதல் 1,900 ஆண்டுகளுக்கு இடையில் கடந்து சென்றிருக்கிறது. இந்த நேரத்தில், அசல் கையெழுத்துக்கள் இழக்கப்பட்டுள்ளன. அவைகள் பெரும்பாலும் இல்லை. பைபிளின் புத்தகங்கள் முதன்முதலாக எழுதப்பட்ட…

கேள்வி

வேதாகமம் சிதைக்கப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்டதா?

பதில்

பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் சுமார் கி.மு. 1400 முதல் கி.மு. 400 வரையிலுள்ள காலக்கட்டத்தில் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டின் புத்தகங்கள் கி.பி. 40 முதல் கி.பி. 90 வரையிலுள்ள காலக்கட்டத்தில் எழுதப்பட்டன. எனவே, வேதாகமத்தின் ஒரு புத்தகம் எழுதப்பட்டதிலிருந்து 3,400 முதல் 1,900 ஆண்டுகளுக்கு இடையில் கடந்து சென்றிருக்கிறது. இந்த நேரத்தில், அசல் கையெழுத்துக்கள் இழக்கப்பட்டுள்ளன. அவைகள் பெரும்பாலும் இல்லை. பைபிளின் புத்தகங்கள் முதன்முதலாக எழுதப்பட்ட காலத்திலிருந்து, மறுபிரதிகள் எழுதப்பட்டிருக்கின்றன. பிரதிகளின் பிரதிகளின் பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, நாம் இன்னும் வேதாகமத்தை நம்பலாமா?

பரிசுத்த வேதாகமம் தேவனால் – சுவாசிக்கப்பட்டது, அதனால் அவற்றில் எவ்வளவேனும் பிழையில்லை (2 தீமோத்தேயு 3:16-17; யோவான் 17:17). கையெழுத்துப் பிரதிகளின் பிரதிகள் அல்ல, ஆனால் அசல் கையெழுத்துப் பிரதிகளுக்கு மட்டுமே பிழையற்ற தன்மை மற்றும் நிலை பயன்படுத்தப்படுகிறது. வேதபாரகர்களின் உன்னிப்பான கவனமிக்க நிலையில் எழுதினாலும், அவைகளில் ஒன்றும் அசல் பிரதியைப்போல சரியானது அல்ல. பல நூற்றாண்டுகளாக, வேதாகமத்தின் பல்வேறு பிரதிகளில் சிறிய வேறுபாடுகள் உருவாயின. இந்த வேறுபாடுகளில் பெரும்பான்மையானவை எளிய எழுத்துப்பிழை வகைகள் (அதாவது அமெரிக்க அண்டை நாடுகளான பிரிட்டனின் அண்டை நாடுகளுடன் என்பதுபோல), தலைகீழ் வார்த்தைகளை (ஒரு கையெழுத்துப் பிரதி “கிறிஸ்து இயேசு” என்றும் இன்னொரு பிரதி “இயேசு கிறிஸ்து” என்றும் கூறுகிறது) அல்லது எளிதில் அடையாளம் காண முடியாத வார்த்தை. சுருக்கமாக, வேதாகமத்திலுள்ள புத்தகங்களில் 99 சதவிகிதத்திற்கும் அதிகமானவைகளில் எவ்வித கேள்விகளும் கேட்கப்படவில்லை. கேள்விக்கு உட்பட்ட 1 சதவிகிதத்திற்கும் குறைவானவைகளில், எந்தஒரு கோட்பாட்டு போதனையோ கட்டளையோ பாதிக்கப்படுவதில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், இன்றைய தினம் நமக்கு இருக்கும் வேதாகமத்தின் பிரதிகள் தூய்மையானவை மற்றும் நம்பகமானவை. எனவே வேதாகமம் கறைப்படுத்தப்பட்டு, மாற்றமடையாமல், திருத்தப்பட்ட நிலையில், அல்லது சிதைந்துவிடவில்லை.

எந்தவொரு நடுநிலையான ஆவண அறிஞர் பல நூற்றாண்டுகளாக வேதாகமம் நன்கு பாதுகாக்கப்பட்டுருப்பதை ஏற்றுக்கொள்வார். கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கும் பிரதிகள், கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் நகல்களின் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட ஒத்ததாக இருக்கின்றன. சவக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, பழைய ஏற்பாட்டின் மற்ற பண்டைய பிரதிகள் எப்படி ஒத்து இருந்தன என்பதை அறிந்து அறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர், சவக்கடல் சுருள்கள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டதைவிட நூற்றுக்கணக்கான வயதுடையவையாக இருந்தாலும் கூட ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஒன்றாகவே ஒத்திருந்தன. வேதாகமத்தின் பல கடினமான சந்தேகவாதிகளும், விமர்சகர்களும் வேதாகமம் வேறு எந்த பண்டைய ஆவணத்தைவிட நூற்றாண்டுகளாக மிகத் துல்லியமாக வழிவழியாக காக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆகவே, எந்தவொரு திட்டமிட்ட முறையிலும் வேதாகமமானது திருத்தப்பட்டு, மாற்றப்பட்டு, அல்லது சிதைக்கப்பட்டதாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வேதாகம கையெழுத்துப் பிரதிகளின் சுத்த அளவானது, தேவனுடைய வார்த்தையை சிதைக்கும் எந்த முயற்சியையும் எளிதில் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது. கையெழுத்துப் பிரதிகள் மத்தியில் இடைவிடா வேறுபாடுகள் காரணமாக சந்தேகத்திற்கு இடமின்றி வேதாகமத்தில் எந்த பெரிய கோட்பாடும் அல்லது அடிப்படை உபதேசமும் பாதிக்கப்படவில்லை.

மீண்டும், கேள்விக்கு வருவோம், நாம் வேதாகமத்தை நம்பலாமா? முற்றிலும் நம்பலாம்! மனிதர்களின் தவறான தவறுகள் மற்றும் வேண்டுமென்றே தாக்குதல்கள் நடந்த போதிலும் தேவன் தம் வார்த்தையைப் பாதுகாத்துள்ளார். இன்றும் நம் கையில் இருக்கும் வேதாகமம் எழுதப்பட்ட காலத்தில் இருந்த அதே வேதாகமம் தான் உள்ளது என்று நாம் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கலாம். வேதாகமம் தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது, ஆகவே நாம் அதை நம்பலாம் (2 தீமோத்தேயு 3:16; மத்தேயு 5:18).

[English]



[முகப்பு பக்கம்]

வேதாகமம் சிதைக்கப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்டதா?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *